முகப்பு
தமிழ்நாடு

அதிமுகவினர் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை!

எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்க தடை.

Updated On : 26 ஜூன், 2024 at 5:44 AM
அப்பாவு
பகிர்:

தமிழக சட்டப்பேரவையின் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க அதிமுக எம்எல்ஏக்களுக்கு தடை விதித்து அவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.

கேள்வி நேரத்திற்கு முன்பாக கள்ளச்சாராய சம்பவத்தை விவாதிக்கக்கோரி அதிமுகவினர் 4-வது நாளாக அமளியில் ஈடுபட்டனர். மேலும், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும் அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.

அதிமுகவினர் கோரிக்கை மறுக்கப்பட்டதால், சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, அதிமுகவினர் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதித்து தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →