அமைச்சர் சேகர்பாபு(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

தண்ணீரில் வடை சுடுகிறார் பிரதமர் மோடி: அமைச்சர் சேகர்பாபு

பிரதமர் மோடி தண்ணீரில் வடை சுடுகிறார் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை தங்கசாலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று நலதிட்ட உதவிகள் வழங்கியப் பின் அவர் பேசியதாவது:

”தமிழகம் புயலால் பாதிக்கப்பட்டபோது பிரதமர் மோடி ஒருமுறைகூட வரவில்லை. பிரதமர் மோடி தண்ணீரில் வடை சுடுகிறார்; எத்தனை முறை அவர் தமிழகத்திற்கு வந்தாலும் டெபாசிட் கூட பெற இயலாது.

புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு உரிய நிவாரணத்தை வழங்கவில்லை ”என்று பேசினார்.

நேற்று நடைபெற்ற சென்னை நந்தனம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, சென்னையில் புயல், வெள்ளம் ஏற்பட்டபோது, மக்கள் அவதிப்பட்டதாகவும் ஆனால், திமுக அரசு உதவிக்கரம் நீட்டுவதற்குப் பதிலாக துயரத்தை மேலும் அதிகரிக்கும் வேலையைச் செய்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

SCROLL FOR NEXT