அமைச்சர் சேகர்பாபு(கோப்புப்படம்)
அமைச்சர் சேகர்பாபு(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

தண்ணீரில் வடை சுடுகிறார் பிரதமர் மோடி: அமைச்சர் சேகர்பாபு

DIN

சென்னை தங்கசாலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று நலதிட்ட உதவிகள் வழங்கியப் பின் அவர் பேசியதாவது:

”தமிழகம் புயலால் பாதிக்கப்பட்டபோது பிரதமர் மோடி ஒருமுறைகூட வரவில்லை. பிரதமர் மோடி தண்ணீரில் வடை சுடுகிறார்; எத்தனை முறை அவர் தமிழகத்திற்கு வந்தாலும் டெபாசிட் கூட பெற இயலாது.

புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு உரிய நிவாரணத்தை வழங்கவில்லை ”என்று பேசினார்.

நேற்று நடைபெற்ற சென்னை நந்தனம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, சென்னையில் புயல், வெள்ளம் ஏற்பட்டபோது, மக்கள் அவதிப்பட்டதாகவும் ஆனால், திமுக அரசு உதவிக்கரம் நீட்டுவதற்குப் பதிலாக துயரத்தை மேலும் அதிகரிக்கும் வேலையைச் செய்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

5-ம் கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!

ஆலங்குளம் அருகே லாரி ஓட்டுநர் குத்திக் கொலை

SCROLL FOR NEXT