முகப்பு
எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு

‘நாங்கள் நலமா இல்லை’: இபிஎஸ் விமர்சனம்

‘சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின் கட்டணம் உயர்ந்து விலைவாசி விண்ணைத் தொட்டுவிட்டது.’

தமிழ்நாடு

‘நாங்கள் நலமா இல்லை’: இபிஎஸ் விமர்சனம்

‘சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின் கட்டணம் உயர்ந்து விலைவாசி விண்ணைத் தொட்டுவிட்டது.’

Updated On : 6 மார்ச், 2024 at 7:27 AM
எடப்பாடி பழனிசாமி
பகிர்:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்த ‘நீங்கள் நலமா’ திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தமிழக அரசு அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை அறிந்துகொள்வதற்கான நீங்கள் நலமா என்ற திட்டத்தையும், அதற்காக உருவாக்கப்பட்ட வலைத்தளத்தையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.

இதனை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில்,

“நலத் திட்டங்கள் நின்றுவிட்டது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்துவிட்டது. விலைவாசி விண்ணைத் தொட்டுவிட்டது.

எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழ்நாடு ஆளாகிவிட்டது. இப்படி, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை. நாங்கள் நலமா இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →