கோப்புப்படம் 
தமிழ்நாடு

கோவையில் பிரதமர் மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதி மறுப்பு!

கோவையில் நடைபெறவிருந்த பிரதமர் மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

DIN

மார்ச் 18 ஆம் தேதி கோவைக்கு வரும் பிரதமர் மோடி வாகனப் பிரசாரம், பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி, பாஜகவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பல்வேறு மாநிலங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் பிதாரிலிருந்து கோவைக்கு மார்ச் 18 ஆம் தேதி பிரதமர் வருகிறார். அன்று கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் இருந்து ஆர்.எஸ். புரம் வரை நடைபெறும் வாகனப் பிரசாரத்தில் பங்கேற்கிறார்.

இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களால் பிரதமர் நரேந்திர மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆர்.எஸ். புரம் தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6-10 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாட நூல்: பள்ளிக் கல்வித் துறை வெளியீடு

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் இன்று மின் நிறுத்தம்

கல்லிடைக்குறிச்சியில் குடும்ப அட்டைகளுக்கான கடைகள்மாற்றம்

களக்காட்டில் பராமரிப்பின்றி வீணாகும் கோயில் தெப்பக்குளம்

வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT