முகப்பு
தமிழ்நாடு

இபிஎஸ் - பாமக எம்.எல்.ஏ. சந்திப்பு: அதிமுக - பாமக கூட்டணி உறுதி?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக எம்.எல்.ஏ. அருள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

Updated On : 17 மார்ச், 2024 at 4:47 PM
பகிர்:

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக எம்.எல்.ஏ. அருள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், பாமக விரும்பும் 7 மக்களவை தொகுதிகளையும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் ஒதுக்க அதிமுக முன்வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பசுமைவழிச் சாலையிலுள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பாமக எம்.எல்.ஏ அருள் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கூட்டணி தொடர்பாக ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பாமக எம்.எல்.ஏ.க்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், இன்று மீண்டும் எம்.எல்.ஏ அருள் சந்தித்துப் பேசினார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் தூதுவராக எம்.எல்.ஏ. அருள் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும், அதிமுக- பாமக கூட்டணி குறித்து நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பெரும்பாலான கட்சிகள் தங்கள் கூட்டணியை உறுதி செய்துள்ளநிலையில், பாமக, தேமுதிக என சில கட்சிகள் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →