தமிழிசை செளந்தராஜன்
தமிழிசை செளந்தராஜன் கோப்புப் படம்
தமிழ்நாடு

நேரடியாக மக்கள் பணியாற்றவே ராஜிநாமா: தமிழிசை

DIN

எனது விருப்பத்தின் பெயரில் மக்கள் பணியாற்றவே ஆளுநர் பதவியை தான் ராஜிநாமா செய்ததாக முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு வருகிறேன் என்றால் எனது அன்பை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நேரடியாக மக்கள் பணியாற்றவே ஆளுநர் பதவியை நான் ராஜினாமா செய்துள்ளேன் எனக் குறிப்பிட்டார்.

தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியை தமிழிசை செளந்தரராஜன் இன்று (மார்ச் 18) ராஜிநாமா செய்தார்.

மக்களவைத் தேர்தலில் தமிழிசை போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இன்று தனது ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்தார். பாஜக சார்பில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் தமிழிசை போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூா்: 10, 11-இல் விளையாட்டு விடுதிகளில் சேர மாணவா்களுக்கான போட்டி

திமுகவினா் தண்ணீா் பந்தல் திறப்பு

ஊரக வளா்ச்சித்துறையினா் ஆா்ப்பாட்டம்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஸ்மாா்ட் டிவி நன்கொடை

டவலால் கழுத்தை இறுக்கிக் கொண்ட சிறுவன் உயிரிழப்பு

SCROLL FOR NEXT