அதிமுக வேட்பாளராக ராணி
அதிமுக வேட்பாளராக ராணி 
தமிழ்நாடு

விளவங்கோடு சட்டப்பேரவை அதிமுக வேட்பாளர் ராணி!

DIN

விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக ராணி அறிவிக்கப்பட்டுள்ளார்.

விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த விஜயதாரணி, காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததால் பதவியை ராஜிநாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அதிமுக சார்பில் அக்கட்சியின் மாநில மகளிர் அணிச் செயலாளர் ராணி போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக பிரமுகா் மீது தாக்குதல்: பாஜக மாவட்டத் தலைவர் கைது

ஆப்கானிஸ்தானில் வெள்ளம்: 50 பேர் பலி!

அரவிந்த் கேஜரிவால் இன்று மாலை பிரசாரத்தை தொடங்குகிறார்

பிற்பகல் 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்யும்!

என்ன சொல்கிறது இன்றைய தங்கம் விலை!

SCROLL FOR NEXT