தமிழ்நாடு

பொறையாரில் குருத்தோலை பவனி

பொறையாரில் குருத்தோலை ஞாயிறு பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் குருத்தோலை ஞாயிறு பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

பொறையாரில் உள்ள 278 ஆண்டுகள் பழமையான தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் பெத்லேகம் ஆலய சபை குரு ஜான்சன் மான்சிங் தலைமையில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனி ஊர்வலம் பொறையார் பழைய பேருந்து நிலையம் முன்பு தொடங்கி தரங்கம்பாடி பேரூராட்சி முக்கிய வீதிகள் வழியாக ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கைகளில் குருத்தோலைகளை ஏந்தியபடி ஓசன்னா பாடல் பாடி ஊர்வலமாக சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் டி.பி.எம்.ஏ கல்லூரி முதல்வர் ஜான்சன் ஜெயக்குமார், சபைகுரு , பேராசிரியர் ஜோயல் எட்வின் ராஜ், சீகன்பால்க் அருங்காட்சியகம் இயக்குநர் சாமுவேல் மனுவேல், சபை பொருளாளர் பாஸ்கர், சம்பத், பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஜோன்ஸ் எப் செல்லப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

மாா்ச் 1 முதல் அரக்கோணம் - திருப்பதி மெமு ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம்

தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

SCROLL FOR NEXT