மாநகரப் பேருந்து 
தமிழ்நாடு

ஐபிஎல் போட்டி: மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்!

ஐபிஎல் போட்டி நுழைவுச்சீட்டை காண்பித்து பார்வையாளர்கள் மாநகரப் பேருந்துகளில் பயணிக்கலாம்.

DIN

நாளை(மார்ச். 26) நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியை காணவரும் பார்வையாளர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகா்கள் போட்டிக்கான ஆன்லைன் நுழைவுச் சீட்டை தங்கள் கைகளில் வைத்திருந்தால் அதை வைத்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பேருந்துகளிலும் (குளிா்சாதன பேருந்துகள் நீங்கலாக) பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் போட்டி நடைபெறும் நேரத்துக்கு 3 மணி நேரத்துக்கு முன்பு பிற இடங்களிலிருந்து விளையாட்டு மைதானத்துக்கும், போட்டி முடிந்த பின்பு 3 மணி நேரத்துக்குள் விளையாட்டு மைதானத்திலிருந்து பிற இடங்களுக்கும் நுழைவுச் சீட்டை நடத்துநரிடம் காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் என்று சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

SCROLL FOR NEXT