திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் குளிக்க பக்கர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்தூரில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அங்கிருக்கும் கடலில் புனித நீராடுவது வழக்கம்.
ஆனால் அப்பகுதியில் உள்ள கடலில் அதிகளவில் ஜெல்லி மீன்கள் உலா வருகின்றன.
இம்மீன்களை தொட்டால், அரிப்பு, அலர்ஜி உள்ளிட்ட உடல் பிரச்னை ஏற்படும். எனவே பக்தர்களின் நலன் கருதி திருச்செந்தூர் கோயில் கடலில் குளிக்க பக்கர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், கடலில் குளிக்காமல், பாதங்களை மட்டும நனைத்துவிட்டு செல்லலாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.