சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுகப்பட்டிருப்பதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு இன்று(நவ.6) வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மோப்ப நாய் உதவியுடன் மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டனர். இந்த நிலையில், மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டு, வெடிபொருட்கள் ஏதும் இல்லாததால் இது வெறும் புரளி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரைத் தொடர்ந்து, ராயபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.