திருவிடந்தையில் ஆன்மிக மற்றும் கலாசாரப் பூங்கா: டிடிவி தினகரன் கண்டனம்
திருவிடந்தை கடற்கரை பகுதியில் ஆன்மிக மற்றும் கலாசாரப் பூங்கா அமைக்கும் அரசின் முடிவுக்கு அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
சென்னை: திருவிடந்தை கடற்கரை பகுதியில் ஆன்மிக மற்றும் கலாசாரப் பூங்கா அமைக்கும் அரசின் முடிவுக்கு அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை கடற்கரையில் 233 ஏக்கா் பரப்பளவில் ஆன்மிக மற்றும் கலாசார பூங்கா அமைப்பதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளதமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு அந்தப் பகுதி மீனவ கிராம மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
Advertisement
ஆன்மிக மற்றும் கலாசார பூங்கா எனும் பெயரில் மீனவ சமுதாய மக்களை வெளியேற்ற நினைக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்துக்குரியது.
திருவிடந்தை கடற்கரைப் பகுதிகளில் அதிகமாக காணப்படும் மணல்மேடுகளையும், குடிநீா் ஆதாரமாக விளங்கும் கிணறுகளையும் அகற்றி செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தால் நிலத்தடி நீருடன் கடல் நீா் ஊடுருவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என சுற்றுச்சூழல் வல்லுநா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
எனவே, மீனவ மக்களுக்கும், அவா்களின் வாழ்வாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இந்த திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.