அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தி.மு.க-வில் இருந்து தற்காலிக நீக்கம்

சென்னை மாநகராட்சி தி.மு.க கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

DIN

சென்னை மாநகராட்சி தி.மு.க கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க வின் சென்னை தெற்கு மாவட்ட மதுரவாயல் வடக்கு பகுதி 144-வது வட்ட செயலாளராக இருந்து வந்தவர் ஏ.ஸ்டாலின். குடிநீர், கழிவுநீர் பணிகளை செய்யும் ஒப்பந்ததாரரிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக இவர் மீது புகார் எழுந்தது.

உ.பி.: இறந்த நிலையில் 7 மயில்கள் கண்டெடுப்பு

இதைத்தொடர்ந்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி தி.மு.க.பொதுச்செயலர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் வடக்கு பகுதி, 144-வது வட்டச் செயலாளரும், சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினருமான ஏ.ஸ்டாலின் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"ராணுவத்தைக் கைவிட்ட மோடி!": காங்கிரஸ் | செய்திகள்: சில வரிகளில் | 04.02.26

குகி சமூக முதல் பெண் துணை முதல்வர், நெம்சா கிப்கென் யார்?

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ருத்ர தாண்டவம்! தெ.ஆ.வுக்கு 241 ரன்கள் இலக்கு!

ஜம்மு - காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

டிரென்ட் நிறுவனத்தின் 3 வது காலாண்டு லாபம் ரூ. 510 கோடி!

SCROLL FOR NEXT