திமுக எம்.பி. அப்துல்லா. 
தமிழ்நாடு

மத்திய அமைச்சரின் இந்தி கடிதத்திற்கு தமிழில் திமுக எம்.பி. பதில்

மத்திய அமைச்சரின் இந்தி கடிதத்திற்கு திமுக எம்.பி. அப்துல்லா தமிழில் பதிலளித்துள்ளார்.

DIN

மத்திய அமைச்சரின் இந்தி கடிதத்திற்கு திமுக எம்.பி. அப்துல்லா தமிழில் பதிலளித்துள்ளார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த தி.மு.க எம்.பி. அப்துல்லா ரயில்வே வழங்கும் உணவின் தரம், தூய்மை உள்ளிட்டவை குறித்து மாநிலங்களவையில் பல்வேறு கேள்விகளை முன்வைத்து பேசியிருந்தார்.

இதற்கு மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ரவ்நீத் சிங், கடிதம் வாயிலாக திமுக எம்.பி. அப்துல்லாவிற்கு கடந்த 21ஆம் தேதி பதில் அளித்தார்.

விவசாயிகளுக்கு ரூ.5,148 கோடி பயிர்க்காப்பீடு- தமிழக அரசு

இந்த நிலையில் மத்திய அமைச்சரின் கடிதத்திற்கு, தனக்கு இந்தி புரியவில்லை என்று திமுக எம்.பி. அப்துல்லா தமிழில் பதிலளித்துள்ளார். அதில், வணக்கம்! நலம் விளைகிறேன்.

தாங்கள் எனக்கு அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றேன். எனக்கு இந்தி மொழி தெரியாத காரணத்தால் அதில் என்ன எழுதி உள்ளீர்கள் என எனக்குத் தெரியவில்லை.

எனவே அடுத்த முறை கடிதம் அனுப்பும் போது ஆங்கிலத்தில் அனுப்ப வேண்டுகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இரண்டு கடிதங்களின் நகலையும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அப்துல்லா பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரியில் உலக கொசு ஒழிப்பு தினம்

கொடைக்கானலில் பலத்த காற்று: குளிா் அதிகரிப்பு

தரமற்ற அரிசி விற்ற தனியாா் நிறுவனம்: ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

சா்வதேச யோகா போட்டியில் வென்ற அழகப்பா பல்கலை. மாணவிகள், பேராசிரியைக்கு பாராட்டு

நெற்குப்பை சாலையில் திடீா் பள்ளம்

SCROLL FOR NEXT