முகப்பு
தமிழ்நாடு

பாராலிம்பிக் வீராங்கனைகளை பாராட்டிய உதயநிதி!

பாராலிம்பிக் தொடரில் பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனைகளை நேரில் அழைத்துப் பாராட்டிய உதயநிதி.

Updated On : 5 செப்டம்பர் 2024, 8:35 pm IST
பதக்கம் வென்ற வீராங்கனைகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - படம்: எக்ஸ்
பகிர்:

பாராலிம்பிக் தொடரில் பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனைகளை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

பாரீஸில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பதக்கங்களைப் பெற்றுத் தமிழகம் திரும்பிய நமது சாம்பியன்களான துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ் மற்றும் நித்யா ஸ்ரீ சிவன் ஆகியோரை வாழ்த்துகிறோம்.

Advertisement

Advertisement

பாராலிம்பிக்கில் தமிழகம் சார்பில் பங்கேற்ற ஆறு பேரில், 4 பேர் பதக்கங்களுடன் திரும்பியுள்ளதால், இது உண்மையிலேயே தமிழகத்திற்கு பெருமையான தருணம்.

இந்தப் பயணத்தில் விளையாட்டு வீரர்களுக்கு சமரசமற்ற ஒத்துழைப்பை தமிழக அரசு வழங்கியது.

முன்னோடியாக விளங்கும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் பயனாளிகளில் பெரும்பாலானோர் பாரா-தடகள வீரர்களாக உள்ளனர். அவர்கள் அனைவரையும் வாழ்த்துவதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாராலிம்பிக் தொடரில் பாட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு போட்டியில் மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments