பத்திரிகையாளர் மன்றத்துக்கு ரூ.2.50 கோடி ஒதுக்கீடு: துணை முதல்வர் உதயநிதி
பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்வு...
சென்னை: பத்திரிகையாளர் மன்றத்துக்கு ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 6) தெரிவித்தார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றம் நடத்திய கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசுத் தொகை வழங்கும் நிகழ்ச்சியானது சென்னையிலுள்ள பத்திரிகையாளர் மன்ற தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 6) மாலை நடைபெற்றது.
அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி கௌரவித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் மு. க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார். மேலும், பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.10,000-லிருந்து ரூ.12,000-ஆக உயர்த்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.