எ.வ.வேலு 
தமிழ்நாடு

செய்யாறு தொழில்வழித் தடத்தை திருவண்ணாமலை வரை நீட்டிக்க நடவடிக்கை: எ.வ.வேலு

செய்யாறு தொழில்வழித் தடச் சாலையை திருவண்ணாமலை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

Din

சென்னை: செய்யாறு தொழில்வழித் தடச் சாலையை திருவண்ணாமலை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த துணை வினாவை பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி எழுப்பினாா். அப்போது பேசிய அவா், செய்யாறு தொழில் பூங்காவில் இருந்து எண்ணூா் துறைமுகத்துக்கு ஏற்றுமதிப் பொருள்களை விரைவாக எடுத்துச் செல்ல தொழில்வழித் தடம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்தத் தொழில் வழித்தடத்தை திருவண்ணாமலை வர நீட்டிக்க வேண்டும் என்றாா்.

இதற்கு அமைச்சா் எ.வ.வேலு அளித்த பதில்:

மாவட்டத் தலைநகாாக உள்ள திருவண்ணாமலைக்கு உள்பட்டு செய்யாறு உள்ளது. அங்கு அமைக்க திட்டமிட்டுள்ள தொழில் வழித் தடத்தை, திருவண்ணாமலைக்கும் நீட்டிக்க முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். மேலும், ஆன்மிக நகரான திருவண்ணாமலைக்கு பிற மாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து தினமும் ஆன்மிகக் கடமையை நிறைவேற்ற வரக்கூடிய 25,000 பேருக்கு அது பயனுடையதாக இருக்கும் என்று தெரிவித்தாா்.

சிதம்பரத்தில் ‘ஹோட்டல் தமிழ்நாடு’ தங்கும் விடுதி திறப்பு

விவசாயிகளின் நலனுக்கு எதிராக பாஜக நடவடிக்கை: அகிலேஷ் யாதவ்!

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

இது தெரியுமா? வெய்யிலில் இருந்து நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

SCROLL FOR NEXT