முகப்பு
தமிழ்நாடு

நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுருகன்

நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் அதிமுக சட்டப்பேரவையில் பேசட்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

Updated On : 20 ஏப்ரல் 2025, 8:09 pm IST
அமைச்சர் துரைமுருகன்
பகிர்:

வேலூர்: நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் அதிமுக சட்டப்பேரவையில் பேசட்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 761 பயணாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகட்டும் ஆணையை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

பின்னர் அவரிடம் நீட் ரகசியம் எங்களுக்கு தெரியும் என கூறி தமிழக மக்களுக்கு துரோகம் விளைவித்த திமுகவால் 22 மாணவர்கள் உயிரிழந்ததாக திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் சனிக்கிழமை முதல் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று செய்தியாளர்களின் கேள்விக்கு, அவர்களுக்கு தைரியம் இருந்தால் இது குறித்து சட்டப்பேரவையில் பேச சொல்லுங்கள் என பதிலளித்தார்.

Advertisement

Advertisement

மேலும், 2026 இல் இறைவன் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப போகிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியிருந்தது குறித்து கேள்விக்கு, "ஐயோ பாவம்" என சிரித்தபடி பதிலளித்து சென்றார் அமைச்சர் துரைமுருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments