மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம் DNS
தமிழ்நாடு

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்

நீர்வரத்துக் குறைந்ததால் மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,500 கன அடியிலிருந்து 16,500 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையம் வழியாக 16,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வந்த நிலையில், காவிரியில் நீர்வரத்து அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், அணையின் பாதுகாப்புக் கருதி 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நீர்வரத்துக் குறைந்திருப்பதால், உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT