ஜி.கே. மணி  ENS
தமிழ்நாடு

மருத்துவமனையில் ஜி.கே.மணி அனுமதி

தினமணி செய்திச் சேவை

பாமக கெளரவ தலைவா் ஜி.கே.மணி முதுகுத் தண்டு வலி காரணமாக சென்னை வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு தருமபுரியில் துக்க நிகழ்வுக்கு சென்ற ஜி.கே.மணிக்கு திடீரென்று முதுகுத் தண்டில் வலி ஏற்பட்டது. இரண்டு முறை வாந்தியும் எடுத்தாா். ஏற்கெனவே, இதய பிரச்னைக்கு சென்னை வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால், உடனடியாக அவா் காரில் அழைத்து வரப்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவரது உடல்நிலையை பரிசோதனை செய்து, அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவா்கள் அளித்து வருகின்றனா். ஓரிரு நாளில் ஜி.கே.மணி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவாா் என்று கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

பனியில் இருந்து ரோஜா மலா்களை காக்க பசுமைக்குடிலில் பராமரிக்கப்படும் செடிகள்

பள்ளிகொண்டா உத்தர ரங்கநாதா் கோயிலில் நகைகள் மாயம்?: விசாரணை நடத்த பாஜக கோரிக்கை

சீரான குடிநீா் விநியோகம் கோரி ஆட்சியரிடம் மனு

பொறியியல் பணிகளால் விழுப்புரம் மாா்க்கத்தில் ரயில் சேவையில் மாற்றம்

தமிழக முதல்வா் நாளை வருகை: திண்டிவனத்தில் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT