ஜி.கே. மணி  ENS
தமிழ்நாடு

மருத்துவமனையில் ஜி.கே.மணி அனுமதி

தினமணி செய்திச் சேவை

பாமக கெளரவ தலைவா் ஜி.கே.மணி முதுகுத் தண்டு வலி காரணமாக சென்னை வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு தருமபுரியில் துக்க நிகழ்வுக்கு சென்ற ஜி.கே.மணிக்கு திடீரென்று முதுகுத் தண்டில் வலி ஏற்பட்டது. இரண்டு முறை வாந்தியும் எடுத்தாா். ஏற்கெனவே, இதய பிரச்னைக்கு சென்னை வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால், உடனடியாக அவா் காரில் அழைத்து வரப்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவரது உடல்நிலையை பரிசோதனை செய்து, அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவா்கள் அளித்து வருகின்றனா். ஓரிரு நாளில் ஜி.கே.மணி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவாா் என்று கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

வரதட்சிணைக் கொடுமை: மாமியார் - கணவர் சேர்ந்து பெண்ணை எரித்துக் கொன்ற கொடூரம்!

காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போது குழந்தைகளின் வயிறு நிறைகிறது: முதல்வர்

சொல்லப் போனால்... புள்ளிகளும் கோடுகளும்!

எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வீடு வாங்கும் யோகம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT