நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ்.  
தமிழ்நாடு

' அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையுடன் கல்வித் துறையை நடத்தி வருகிறோம் '

அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையுடன் கல்வித் துறையை நடத்தி வருகிறோம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திச் சேவை

அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையுடன் கல்வித் துறையை நடத்தி வருகிறோம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க. எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குர் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினார்.

அப்போது அவர், "விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார்?" என கேள்வி எழுப்பினார். அதற்கு மாணவர்கள் ஒருமித்த குரலில் "நீல் ஆம்ஸ்ட்ராங்" எனப் பதிலளித்தனர். ஆனால், அதற்கு பதிலளித்த அனுராக் தாக்குர், "எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன் தான்" எனத் தெரித்தார்.

பாஜகவினரின் அறிவு நாளுக்குநாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது: சு. வெங்கடேசன்

அவரின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்வினையை ஆற்றி வருகின்றனர். இதுகுறித்து நெல்லையில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில், அவ்வாறு பேசுவது அவரது இஷ்டம். அது குறித்து நான் கருத்து கூற முன்வரவில்லை.

ஆனால் நாங்கள் அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையோடு தந்தை பெரியார் வழியில் பள்ளிக்கல்வித் துறையை, தமிழக முதல்வர் வழிகாட்டுதலோடு செயல்பட்டு வருகிறது. அறிவைச் சார்ந்து இருக்கும் எங்கள் பாதையில் நாங்கள் செல்லும்போது எங்களோடு பயணிக்க விரும்புபவர்கள் வரலாம் என்றார்.

School Education Minister Anbil Mahesh has stated that we are running the education sector with progressive thinking based on science.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!

டி20 உலக கோப்பை: அரையிறுதிச் சுற்று வாய்ப்பைத் தக்க வைத்த இந்தியா! அபார வெற்றி!!

அரசு விழாவில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு!

குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்களுக்கு 2 ஆண்டுகள் சிறை!

கரூா் ஒன்றியத்தில் ரூ. 6.43 கோடியில் 24 வளா்ச்சித் திட்டப் பணிகள்! வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்!

SCROLL FOR NEXT