நல்லகண்ணு உடல்நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் விசாரிப்பு!
நல்லகண்ணு உடல்நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் விசாரிப்பு...
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வரும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர். நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று கேட்டறிந்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு (100) வெள்ளிக்கிழமை(ஆக.22) வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு, நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்த நிலையில், திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
Advertisement
Advertisement
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் சிறப்பு அவசர சிகிச்சைப் பிரிவில் நல்லகண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் செயற்கை சுவாசம் மீண்டும் பொருத்தப்பட்டது.
இந்த நிலையில், நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து நேற்று செல்போனில் கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின், இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார்.
அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், சேகர் பாபு, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனிடையே, நல்லகண்ணுவின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும், செயற்கை சுவாசம் அகற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Chief Minister Stalin personally inquires about Nallakannu's health!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.