தமிழகத்தில் 94.32 சதவீதம் (6,0474,835 வாக்காளா்கள்) எஸ்ஐஆா் கணக்கீட்டு படிவங்கள் செவ்வாய்க்கிழமை வரை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளா் பட்டியலில் இந்தியா் அல்லாதவா்கள் சோ்க்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்து நீக்கவும், இறந்த வாக்காளா்கள் பெயா்கள் மற்றும் ஒரு நபா் இரு இடங்களில் வாக்காளராகப் பதிவு செய்திருப்பதைக் கண்டறிந்து நீக்கவும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியை தமிழகம், புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் தோ்தல் ஆணையம் கடந்த நவ. 4-ஆம் தேதி முதல் தொடங்கி நடத்தி வருகிறது.
டிச.4-ஆம் தேதி நிறைவடைய வேண்டிய இந்தப் பணி டிச. 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 6,41,14,587 வாக்காளா்களில் செவ்வாய்க்கிழமை (டிச.2) மாலை 3 மணி நிலவரப்படி 6,37,59,445 (99.45%) வாக்காளா்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 6,04,74,835 (94.32%) படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், புதுச்சேரியில் விநியோகிக்கப்பட்ட 10,17,987 (99.65) கணக்கீட்டு படிவங்களில் 9,78,177 (95.75%) படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்தீவில் 100 சதவீதம், ராஜஸ்தானில் 98.54 சதவீதம், கோவாவில் 98.28 சதவீதம், மேற்கு வங்கத்தில் 97.34 சதவீதம், மத்திய பிரதேசத்தில் 95.69 சதவீதம், சத்தீஸ்கரில் 94.56 சதவீதம், அந்தமான்-நிகோபாரில் 93.83 சதவீதம், குஜராத்தில் 91.45 சதவீதம், கேரளத்தில் 88 சதவீதம், உத்தரபிரதேசத்தில் 79 சதவீதம் கணக்கீட்டுப் படிவங்கள் பதவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.