சென்னை மழை (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

தொடர் மழை: விம்கோ நகர் வாகன நிறுத்துமிடம் மூடல்!

தொடர் மழை காரணமாக, விம்கோ நகர் வாகன நிறுத்துமிடம் மூடப்படுகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

தொடர் மழை காரணமாக, நீர்மட்டம் அதிகரித்து வருவதால், விம்கோ நகர் வாகன நிறுத்துமிடம் தற்காலிகமாக மூடப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், விம்கோ நகர் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சென்னை விம்கோ நகர் மெட்ரோ வாகன நிறுத்துமிடம் பகுதியில் மழையால் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

விம்கோ நகர் ரயில் நிலையத்தில் 4 சக்கர வாகன நிறுத்துமிடம் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், வாகனத்தை நிறுத்தியவர்கள் உடனே வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Due to continuous rain, the Wimco Nagar parking lot is closed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் பிறந்தநாள்! தலைவர்கள் மரியாதை!

ஜப்பானில் வெளியாகும் புஷ்பா - 2! புதிய டிரைலர் வெளியீடு!

சென்னையில் மழைநீர் தேங்கவில்லை! விஜய்யின் குற்றச்சாட்டுக்கு டிகேஎஸ் இளங்கோவன் மறுப்பு!

தனுஷா, ஸ்ரேயஸா? மறைமுகமாக பதிலளித்த மிருணாள் தாக்கூர்!

இந்தியாவில் கல்வி பயிலும் 72,000 வெளிநாட்டு மாணவர்கள்! மத்திய அரசு தகவல்!

SCROLL FOR NEXT