முகப்பு
தமிழ்நாடு

விடியற்காலையில் நிலவும் கடும் பனி மூட்டம்! வேலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விடியற்காலையில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக வேலூரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 8 டிசம்பர், 2025 at 4:38 AM
கடும் பனி மூட்டம்
பகிர்:

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் விடியற்காலையில் நிலவும் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் மற்றும் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

சாலைகளில் வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரிய விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கேவி குப்பம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று விடியற்காலை முதல் கடும் பனி பொழிவு நிலவியது.

இதனால், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் வேன்கள் இருசக்கர வாகனங்களில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் லோடு வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டு வாகனத்தை இயக்கிச் செல்கின்றனர்.

மேலும் கிராமப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் விவசாய பணியை மேற்கொள்ள முடியாமல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →