ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு. கோப்புப்படம்
தமிழ்நாடு

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றே மக்கள் விரும்புகிறார்கள்: ஓபிஎஸ் பேட்டி

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று விரும்புவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றுசமீபமாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதிமுக தொண்டர்களும் அதைத்தான் விரும்புவதாகவும் கூறி வருகிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ், டிச. 2 ஆம் தேதி தில்லி பயணம் மேற்கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார்.

தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து அவரிடம் பேசியதாகத் தெரிவித்தார்.

இதனிடையே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுபற்றிய செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த ஓபிஎஸ்,

"அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது குறித்து பொதுக்குழு நடத்துபவர்களிடம்தான் கேட்க வேண்டும்.

தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அனைவருமே, பிரிந்து கிடக்கின்ற அதிமுக சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்" என்று தெரிவித்தார்.

People want AIADMK to unite: OPS press meet

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுவையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு!

அவசரமாக தரையிறக்கப்பட்ட சிறிய ரக விமானம் காரில் மோதி விபத்து! | Florida

மத்திய புலனாய்வுத் துறையில் எம்டிஎஸ் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

ராகுலின் கேள்விக்கு பாஜகவும் மோடியும் இன்னும் பதில் அளிக்கவில்லை! - காங்கிரஸ் எம்.பி.

ஹார்ட் பீட் - 3 இணையத் தொடரின் அறிவிப்பு விடியோ!

SCROLL FOR NEXT