அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! கோபி, போடியில் யார்?
அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது பற்றி...
அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 27) வெளியிட்டுள்ளார்.
ஏற்கெனவே, கடந்த புதன்கிழமை 23 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது 127 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் தேர்தல் களத்தில் பணியைத் தீவிரப்படுத்தியுள்ள அதிமுக, தொகுதிப் பங்கீட்டை முடித்து, வேட்பாளர்களை அறிவித்து வருகின்றது.
Advertisement
Advertisement
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளில், பாமக 18 தொகுதிகளில், அமமுக 11 தொகுதிகளில், தமாகா 5 தொகுதிகள் மற்றும் சிறிய கட்சிகளுக்கு ஓரிரு தொகுதிகளை அதிமுக ஒதுக்கியது. அதிமுக 169 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
முதல்கட்ட பட்டியலில் முன்னாள் முதல்வரும் கட்சியின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உள்பட 23 முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், 127 தொகுதிகளின் வேட்பாளர்களை கொண்ட இரண்டாம் கட்டப் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களான முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் போடி நாயக்கனூர் தொகுதியில் வி.டி. நாராயணசாமியும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வி.பி. பிரபுவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர்கள் தளவாய்சுந்தரம் கன்னியாகுமரி, எம்.எஸ்.எம். ஆனந்தன் திருப்பூர் வடக்கு, இசக்கி சுப்பையா அம்பாசமுத்திரம், சண்முகநாதன் ஸ்ரீவைகுண்டம், எம்.சி. சம்பத் கடலூர், தாமோதரன் கிணத்துக்கடவு, முக்கூர் என். சுப்பிரமணியன் செய்யார், பாலகிருஷ்ணன் ரெட்டி ஓசூர், மாதவரம் மூர்த்தி மாதவரம், ரமணா திருவள்ளூர் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
AIADMK second phase candidate list released!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.