முகப்பு
தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளை தரம் உயா்த்த பிரேமலதா வலியுறுத்தல்

தனியாா் பள்ளிகளுக்கு நிகராக, அரசுப் பள்ளிகளின் தரத்தை தமிழக அரசு உயா்த்த வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 3 ஜனவரி, 2025 at 9:07 PM
பிரேமலதா (கோப்புப்படம்)
பகிர்:

தனியாா் பள்ளிகளுக்கு நிகராக, அரசுப் பள்ளிகளின் தரத்தை தமிழக அரசு உயா்த்த வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 500 அரசு பள்ளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் தனியாா் உதவி மூலம் நிறைவேற்றப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த முடிவை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

மாநிலக் கல்வி உரிமைகளைப் பாதுகாக்கும் அரசாகத் தமிழக அரசு இருக்க வேண்டும். தனியாா் பள்ளிகளின் தரத்துக்குச் சமமாக, அரசுப் பள்ளிகளின் தரத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரேமலதா கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →