முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி 
தமிழ்நாடு

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: சிபிஐ.யிடம் ஒப்படைக்க உத்தரவு

முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN

சென்னை: முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, விருதுநகரைச் சோ்ந்த அதிமுக முன்னாள் பிரமுகா் விஜய நல்லதம்பி, சாத்தூரைச் சோ்ந்த ரவீந்திரன் ஆகியோரிடம் ரூ.30 லட்சம் பெற்ாக புகாா் எழுந்தது.

உறுதியளித்தபடி வேலை வாங்கிக் கொடுக்கவில்லை எனக் கூறி ரவீந்திரன் அளித்த புகாரின்பேரில், முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக விருதுநகா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி ரவீந்திரன் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சா் என்பதால் அவரது அரசியல் செல்வாக்கு காரணமாக வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளாா்.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவு: இந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர அரசின் அனுமதி பெறும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டும் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. மேலும், தமிழக காவல் துறைக்கு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த நேரமில்லாததால், இந்த வழக்கு தொடா்பான ஆவணங்களை சிபிஐ விசாரணைக்கு வழங்க வேண்டும் என விருதுநகா் மாவட்ட காவல் துறைக்கு உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 80 லட்சம் பறிமுதல்

ஆபரேஷன் சிந்தூரில் பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பம் சிதைந்துவிட்டது: ஜெய்ஷ் தளபதி ஒப்புதல்

கஞ்சா விற்பனை: இருவா் கைது

ஏப்.1 முதல் ஆக.31 வரை பணியில் சோ்ந்த மத்திய அரசுப் பணியாளா்கள்: யுபிஎஸ்ஸுக்கு மாற ஒருமுறை வாய்ப்பு

திருப்பத்தூரில் 471 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 56.48 கோடி வங்கிக் கடன்: ஆட்சியா், எம்எல்ஏ-க்கள் வழங்கினா்

SCROLL FOR NEXT