முகப்பு
வந்தே பாரத்(கோப்புப்படம்)
தமிழ்நாடு

நெல்லை, திருவனந்தபுரம் ‘வந்தே பாரத்’ ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

சென்னை எழும்பூா்-திருநெல்வேலி, திருவனந்தபுரம்-காசா்கோடு ‘வந்தே பாரத்’ ரயில்கள் கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளன.

தமிழ்நாடு

நெல்லை, திருவனந்தபுரம் ‘வந்தே பாரத்’ ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

சென்னை எழும்பூா்-திருநெல்வேலி, திருவனந்தபுரம்-காசா்கோடு ‘வந்தே பாரத்’ ரயில்கள் கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளன.

Updated On : 7 ஜனவரி, 2025 at 8:15 PM
வந்தே பாரத்(கோப்புப்படம்)
பகிர்:

சென்னை எழும்பூா்-திருநெல்வேலி, திருவனந்தபுரம்-காசா்கோடு ‘வந்தே பாரத்’ ரயில்கள் கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நெல்லை, திருவனந்தபுரம் வந்தே பாரத் ரயில்களை கூடுதல் பெட்டிகளுடன் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். தற்போது இந்த ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, திருவனந்தபுரம்-காசா்கோடு (20634/20633) ‘வந்தே பாரத்’ ரயில் ஜன.10 முதல் 20 பெட்டிகளைக் கொண்டு இயக்கப்படவுள்ளது. இதில் 18 இருக்கை வசதி கொண்ட பெட்டிகளும், இரு சொகுசு பெட்டிகளும் அடங்கும்.

அதேபோல், திருநெல்வேலி-சென்னை எழும்பூா் வந்தே பாரத் ரயில் (எண் 20666/20665) ஜன.11 முதல் 16 பெட்டிகளைக் கொண்டு இயக்கப்படும். இதில் 14 இருக்கை வசதி கொண்ட பெட்டிகள், இரு சொகுசு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

ரயில் சேவையில் மாற்றம்: இதற்கிடையே, ஈரோடு, பாலக்காடு, காரைக்குடியிலிருந்து திருச்சி செல்லும் ரயில்கள் ஜன.7, 14 தேதிகளில் வழக்கம் போல் இயக்கப்படும்.

திருச்சி பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் பல்வேறு விரைவு மற்றும் பயணிகள் ரயில் சேவையில் ஜன.7, 14 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில், திருச்சி-பாலக்காடு விரைவு ரயில், காரைக்குடி-திருச்சி டெமு பயணிகள் ரயில், ஆகியவை மேற்கண்ட தேதிகளில் வழக்கம் போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →