கோப்புப் படம் 
தமிழ்நாடு

காவேரிப்பட்டிணத்தில் ஜிம் உரிமையாளரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 22 லட்சம் பறிமுதல்!

காவேரிப்பட்டிணத்தில் ஜிம் உரிமையாளரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

DIN

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டிணத்தில் ஜிம் உரிமையாளரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம், கருக்கண் சாவடியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (39). ஜிம் உரிமையாளர். இவரது உடற்பயிற்சி மையம் அருகே இன்று அதிகாலை, காரில் வந்த சில இளைஞர்கள், சிலம்பரசனிடம் தகராறில் ஈடுபடுவதை கண்ட பொதுமக்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் நிகழ்வு இடத்திற்கு போலீசார் சென்றனர். போலீசாரைக் கண்டதும், தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் காரில் தப்பிச் சென்றனர்.

பின்னர், சிலம்பரசன் மற்றும் அவருடன் இருந்த அவரது நண்பர்களான தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தருமபுரி அன்பு, மாரண்டஹள்ளி அன்பு ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து, சிலம்பரசனின் உடற்பயிற்சி மையத்தில் சோதனை செய்தபோது அங்கு மறைத்து வைத்திருந்த ரூ.22 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து, சிலம்பரசன் மற்றும் அவரது நண்பர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கிறதா? மன அழுத்தமாக இருக்கலாம்!

வா வாத்தியார் அவர்களுக்கான படம் கிடையாது... நலன் குமாரசாமி!

நமக்குள் பிளவை அனுமதிக்காதீர்: முதல்வர் ஸ்டாலின்

ஜன நாயகனுக்காக காத்திருந்தேன்! பராசக்திக்கு வாழ்த்துகள்! அண்ணாமலை பேட்டி! | BJP

”விஜய்க்கு நெருக்கடி கொடுக்கிறோமா?” பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் | TVK | BJP

SCROLL FOR NEXT