இரா. முத்துவேலு காலமானார்
மன்றாம்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் இரா. முத்துவேலு காலமானார்.
மன்றாம்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் இரா. முத்துவேலு ஜன.12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார்.
அவரது இறுதிச்சடங்குகள் திருப்பூர், காங்கயம் சாலை, ஐஸ்வர்யா கார்டனில் (டிஎஸ்கே மருத்துவமனை பின்புறம்) உள்ள இல்லத்தில் திங்கள்கிழமை மதியம் நடைபெறுகிறது.
இவருடைய மகன் வ.மு. முரளி, தினமணி தருமபுரி பதிப்பின் துணை செய்தியாசிரியராகப் பணியாற்றுகிறார்.
தொடர்புக்கு: 99526 79126, 94867 63976.