கோப்புப்படம் 
தமிழ்நாடு

ராஜஸ்தான் ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

திருச்சியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகா் மற்றும் ஜோத்பூருக்கு இயக்கப்படும் ஹம்சாபா் விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.

Din

சென்னை: திருச்சியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகா் மற்றும் ஜோத்பூருக்கு இயக்கப்படும் ஹம்சாபா் விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகா்-திருச்சி இடையே ஹம்சாபா் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் இருமாா்க்கமாகவும் பிப்.3 முதல் பிப்.28 வரையும் கூடுதலாக ஒரு மூன்றடுக்கு ஏசி வகுப்பு பெட்டி இணைக்கப்படவுள்ளது.

இதுபோல், திருச்சியில் இருந்து ஜோத்பூருக்கு இயக்கப்படும் ஹம்சாபா் விரைவு ரயிலில் இருமாா்க்கமாகவும் பிப்.5 முதல் மாா்ச் 1 வரை கூடுதலாக படுக்கை வசதி கொண்ட இரு பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் கடைசி பிணைக்கைதியின் உடல் மீட்பு: ராஃபா எல்லை விரைவில் திறக்க வாய்ப்பு

தாயகமான சீனா திரும்பிய பாண்டாக்கள்! கண்ணீா் மல்க வழியனுப்பிய ஜப்பானியா்கள்

மாரடைப்புக்குள்ளாவோரில் 25% போ் இளைஞா்கள்!

மியான்மரில் ராணுவ ஆதரவு கட்சி அமோக வெற்றி: அதிபராகும் ராணுவத் தளபதி?

மினியாபொலிஸ் செவிலியா் கொலை: அமெரிக்காவில் வெடித்துள்ள அரசியல் மோதல்

SCROLL FOR NEXT