விடுதலையான மீனவர்கள். ANI
தமிழ்நாடு

இலங்கையில் விடுவிக்கப்பட்ட 6 மீனவர்கள் சென்னை வருகை!

தமிழகம் அழைத்துவரப்பட்ட மீனவர்கள் பற்றி...

DIN

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 6 தமிழக மீனவர்கள் வியாழக்கிழமை காலை சென்னை வந்தடைந்தனர்.

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 12 ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 6 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, 6 மீனவர்களை விடுவிக்க இலங்கை ஒப்புக் கொண்டது.

இந்த நிலையில், இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 6 மீனவர்களும் விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு இன்று காலை வந்தடைந்தனர்.

அவர்கள் 6 பேரையும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, தமிழக அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் ராமேசுவரத்துக்கு அனுப்பிவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தசரா: பரேலியில் ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பு! இணைய சேவைகள் துண்டிப்பு!

புதிய ரேஸுக்கு தயாராகும் அஜித், நரேன் கார்த்திகேயன்!

தங்கம் விலை உயர்வு! இன்று மாலை நிலவரம்!

அதிவேகமாக 50 விக்கெட்டுகள்... டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!

ஜாவா சுந்தரேசன் எனப் பெயரை மாற்றிக்கொண்ட சாம்ஸ்!

SCROLL FOR NEXT