முகப்பு
தமிழ்நாடு

உள்ளாட்சிகளில் நியமன பதவிக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

தமிழக உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நியமனத்துக்கான விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து சமா்ப்பிக்குமாறு அமா் சேவா சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Updated On : 12 ஜூலை 2025, 1:05 am IST
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
பகிர்:

தமிழக உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நியமனத்துக்கான விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து சமா்ப்பிக்குமாறு அமா் சேவா சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் செயலா் சங்கர ராமன் வெளியிட்ட அறிக்கை:

தமிழக உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை நியமிக்கும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. அதன்படி, நியமன பதவிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவத்தை தமிழக அரசின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, ஜூலை 17-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலா், நகராட்சி ஆணையா், மாநகராட்சி ஆணையரிடம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement