புறநகர் மின்சார ரயில் கோப்புப்படம்
தமிழ்நாடு

அரக்கோணத்தில் 56 நாள்கள் தண்டவாள பராமரிப்புப் பணி

அரக்கோணம் ரயில் நிலையத்தில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் 56 நாள்கள் தொடா்ந்து மேற்கொள்ளப்படவுள்ளது.

Din

அரக்கோணம் ரயில் நிலையத்தில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் 56 நாள்கள் தொடா்ந்து மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதே நேரத்தில் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை ரயில் கோட்டத்தில் உள்ள அரக்கோணம் ரயில் நிலையத்தில் தண்டவாள கடவுப் பாதைகள் உள்ளிட்டவை மேம்படுத்தப்படவுள்ளன. அதையடுத்து, அங்குள்ள 3 மற்றும் 4-ஆவது தண்டவாளத்தில் பராமரிப்புப் பணிகள் வரும் சனிக்கிழமை (ஜூலை 19) முதல் வரும் செப்.12-ஆம் தேதி வரை மொத்தம் 56 நாள்கள் நடைபெறவுள்ளன.

பணிகள் தினமும் இரவு 12.45 முதல் அதிகாலை 2.15 மணி வரை மேற்கொள்ளப்படவுள்ளது. எனினும், ரயில் போக்குவரத்தில் பாதிப்பிருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், பராமரிப்புப் பணிகளால் 56 நாள்களும் அரக்கோணம் வழி செல்லும் தன்பாத்-ஆலப்புழா விரைவு ரயில் (எண் 13351) 90 நிமிஷங்கள் தாமதமாகச் செல்லும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தியா வருகிறார் உக்ரைன் அதிபர்!

புதுச்சேரி மக்கள் சந்திப்பு வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டும்: தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்

7வது நாளில் இண்டிகோ விமான சேவை பாதிப்பு! பெங்களூரிலிருந்து 127 விமானங்கள் ரத்து

தமிழகத்தில் ஹிந்து தர்மத்தை பின்பற்ற சட்டப் போராட்டம் நடத்தும் நிலை! பவன் கல்யாண்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்: ஆதீனங்கள், மடாதிபதிகள் பங்கேற்பு

SCROLL FOR NEXT