பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர் செல்வம். (கோப்புப் படம்)
தமிழ்நாடு

பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்!

தமிழகம் வரும் பிரதமர் மோடியை ஓ.பன்னீர் செல்வம் சந்திக்கவிருப்பதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர் செல்வம் சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தமிழகத்தில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் வேளையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியிருக்கிறது. யார் யாருடன் கூட்டணி? மும்முனைப் போட்டியா? நான்கு முனைப் போட்டியா? என பரபரப்பு நிலவி வருகிறது.

இதனை மேலும், தீவிரப்படுத்தும் விதமான பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறைப் பயணமாக தமிழகம் வருகிறார். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அமமுக ஆதரவு தெரிவித்தாலும், ஓபிஎஸ் அணியினரை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி முற்றிலுமாக புறந்தள்ளிவிட்டார்.

முன்னதாக, தமிழகம் வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ, அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிடப்போவதில்லை எனத் தெரிவித்திருந்தார்.

மீண்டும் அதிமுகவில் இணையும் முயற்சியில் ஓ.பன்னீர் செல்வம் ஈடுபட்டுள்ளதாகவே தோன்றுகிறது. இதனால், அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவாரா? அல்லது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்வாரா? அல்லது தனித்து போட்டியிடப் போகிறாரா? என சந்தேகங்கள் எழுகின்றன.

இருப்பினும், பிரதமர் மோடியைச் சந்திக்க தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதன்படி, பன்னீர் செல்வத்துக்கு பிரதமர் மோடியைச் சந்திக்க தூத்துக்குடி விமான நிலையத்தில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, ரூ.1,032 கோடியில் 3 முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

அங்கு விரி​வாக்​கம் செய்​யப்​பட்ட விமான நிலை​யத் திறப்பு விழா மற்​றும் மத்​திய அரசு சார்பில் நிறைவேற்​றப்​பட்ட பல்​வேறு திட்டப் பணி​களின் தொடக்க விழாவும் விமான நிலைய வளாகத்​தில் நாளை (ஜூலை 26) நடை​பெறுகிறது. பிரதமர் வருகையை முன்​னிட்டு 5 அடுக்கு பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்யப்பட்டுள்ளது.

O. Panneerselvam meets Prime Minister Modi!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துபை இளவரசி... துஷாரா விஜயன்!

ஆக்சிஜன் சிலை... ஜான்வி!

வரலாறு காணாத சரிவுக்கு பிறகு ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.88.11 ஆக நிறைவு!

19 வயதில் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட பெண்ணுக்கு 79-இல் நீதி கிடைத்தது..!

எலுமிச்சை ஏற்றும்போது Accelerator-ஐ அழுத்திய பெண்! முதல் மாடியிலிருந்து விழுந்த கார்!

SCROLL FOR NEXT