FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மோசடி புகார்: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது தொடர்பாக...

பவர் ஸ்டார் சீனிவாசன் - கோப்புப்படம்
பகிர்:

ரூ. 1,000 கோடி கடன் வாங்கித் தருவதாக ரூ. 5 கோடி பெற்ற மோசடி புகாரில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தில்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுதில்லியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் திலீப்குமார். கட்டுமான நிறுவனம் நடத்தி வந்த திலீப்குமார், தனது நிறுவனத்தை விரிவுபடுத்த ரூ.1000 கோடி கடன் பெறுவதற்கு முயற்சித்து வந்தார். இதையறிந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், தான் கடன் வாங்கித் தருவதாக திலீப்குமாரிடம் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கான கமிஷன் தொகையாக ரூ.10 கோடியை முதலில் தரும்படி சீனிவாசன் கேட்டாதாகவும் இதையடுத்து திலீப்குமார், சீனிவாசனுக்கு ரூ. 5 கோடியை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

பணத்தைப் பெற்றுக் கொண்ட சீனிவாசன், சொன்னபடி, கடனை பெற்றுக் கொடுக்காமல் மோசடி செய்ததாக, திலீப்குமார், தில்லி பொருளாதார குற்றப்பிரிவில் சீனிவாசன் மீது புகார் செய்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், சீனிவாசன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கடந்த 2013-ஆம் ஆண்டு கைது செய்தனர்.

அதன் பின்னர், ஜாமீனில் வெளியே வந்த சீனிவாசன், 2018 ஆம் ஆண்டு முதல் விசாரணை நடவடிக்கைகளில் இருந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், மோசடிப் புகார் தொடர்பாக தில்லி காவல் துறையினரால் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இன்று(ஜூலை 30) கைது செய்யப்பட்டார்.

சென்னையிலும் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Actor Power Star Srinivasan has been arrested by the Delhi Police in a case of fraud in which he received Rs 5 crore on the pretext of taking a loan of Rs 1000 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments