விஷ்ணுபுரம் சரவணன் / ஒற்றைச் சிறகு ஓவியா புத்தக அட்டை படம் - முகநூல்
தமிழ்நாடு

விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது!

ஒற்றைச் சிறகு ஓவியா என்கிற சிறார் நாவலுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழில் விஷ்ணுபுரம் சரவணணுக்கு 2025ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் எழுதிய ஒற்றைச் சிறகு ஓவியா என்கிற சிறார் நாவலுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, 24 மொழிகளில் பல்வேறு எழுத்தாளர்கள் எழுதி வெளியான கவிதை, நாவல், நாடகம், கட்டுரை, சிறுகதைகளுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் விஷ்ணுபுரம் சவரணனுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் எழுதி, பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ஒற்றைச் சிறகு ஓவியா என்கிற சிறார் நாவலுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.

தமிழில் தொடர்ந்து சிறார் கதைகள், நாவல்கள் எழுதிவரும் விஷ்ணுபுரம் சரவணன், கயிறு, நீலப்பூ, எலியின் வேட்டை உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

இதேபோன்று, கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள் சிறுகதைத் தொகுப்புக்காக எழுத்தாளர் லட்சுமிஹருக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு மொழியில் கங்கிசெட்டி சிவகுமாருக்கும், மலையாளத்தில் ஸ்ரீஜித் மூதேதாத்துக்கும் பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | திருச்செந்தூரில் தமிழில் குடமுழுக்கு: கோயில் நிர்வாகம் அறிவிப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெரு நாய்களை அப்புறப்படுத்த இடைக்காலத் தடை இல்லை: தீர்ப்பு ஒத்திவைப்பு!

குழந்தைகளைக் கொல்வதை நிறுத்துங்கள்..! யுஇஎஃப்ஏ கண்டனம்!

ஏலகிரி மலைமக்களுடன் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

வங்கியில் வேலை வேண்டுமா..?: பரோடா வங்கியில் மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சிகிச்சை, காப்பீடு, வீடு, உணவு... தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்புத் திட்டங்கள்- தங்கம் தென்னரசு

SCROLL FOR NEXT