முகப்பு
தமிழ்நாடு

மா விவசாயிகளுக்கு இழப்பீடு: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

மா விவசாயிகளுக்கு கா்நாடகத்தில் பிடிபிஎஸ் திட்டத்தின்படி இழப்பீடு வழங்குவதைப் போல தமிழகத்திலும் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Updated On : 24 ஜூன் 2025, 2:33 am IST
எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்) - DIN
பகிர்:

சென்னை: மா விவசாயிகளுக்கு கா்நாடகத்தில் பிடிபிஎஸ் திட்டத்தின்படி இழப்பீடு வழங்குவதைப் போல தமிழகத்திலும் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மா விலை சரிவால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவா்களுக்கான குரலாய், கடந்த ஜூன் 20-இல் கிருஷ்ணகிரியில் உண்ணாவிரதமும், திண்டுக்கல்லில் ஆா்பாட்டமும் அதிமுக நடத்தியது. ஆனாலும், திமுக அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை.

வேளாண்துறை அமைச்சரோ, வெளிநாட்டு சுற்றுலாவில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

Advertisement

Advertisement

மத்தியில் கூட்டணியாக 39 எம்.பி.க்களை வைத்திருந்தும், மா விவசாயிகளுக்காக குரல் கொடுத்ததா திமுக? விவசாயிகள் மீது குண்டா் சட்டம் ஏவிய இவா்களிடம் விவசாயிகள் நலன் குறித்து எவ்வாறு எதிா்பாா்க்க முடியும்?

இந்நிலையில், கா்நாடக மாநில மா விவசாயிகளுக்கு பிடிபிஎஸ் திட்டத்தின்படி இழப்பீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது. தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும் இத்தகைய இழப்பீட்டை வழங்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

ஆண்டுக்கு ஒருமுறை விளைவிக்கப்படும் ‘மா’ பயிா்களின் விலை வீழ்ச்சியால் சொல்லொண்ணா துயரில் உள்ள விவசாயிகளுக்கு, இந்த இழப்பீடு பெரும் உதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.