பேருந்து மீது லாரி மோதி விபத்து - கோப்புப்படம் 
தமிழ்நாடு

மதுரையில் லாரி - பேருந்து மோதி விபத்து

மதுரையில் லாரி - பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

DIN

மதுரையில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது வேகமாக வந்த தனியார் பயணிகள் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரை விமான நிலையம் அருகே வெளிப்புற வட்டச்சாலையில் வேகமாக வந்த பேருந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியதில் இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் பேருந்து இந்த விபத்தில் சிக்கியதாகவும் இதில், பேருந்தில் இருந்த 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர். வயதான பெண்மணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேருந்துக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்க முடியாமல், கிரேன் வரவழைக்கப்பட்டு, கிரேன் உதவியோடு பேருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அதில் சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பேருந்து ஓட்டுநர் அதிவேகமாக பேருந்தை இயக்கியதே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. பேருந்து மோதிய வேகத்தில், சாலையோரம் நின்றிருந்த லாரி, அதன் முன் நிறுத்தப்பட்டிருந்த காரை இடித்ததில், கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT