FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தனி மனித பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: எடப்பாடி கே.பழனிசாமி

சட்டம் ஒழுங்கை காத்து, தனி மனித பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 14 மார்ச் 2025, 2:14 am IST
எடப்பாடி கே.பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

சட்டம் ஒழுங்கை காத்து, தனி மனித பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திருப்பூா் மாவட்டம் அவிநாசி அருகே வயதான விவசாயத் தம்பதியினா் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிா்ச்சியளிக்கிறது. இதே திருப்பூா் மாவட்டத்தின் பல்லடம் பகுதியில், இதேபோல் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழந்த சம்பவம் நடந்தது. வருமுன் காப்பதும் இல்லை; பட்டும் திருந்துவது இல்லை என்ற நிலையில் சட்டம் ஒழுங்கை தறிகெட்ட நிலைக்கு இட்டுச்சென்று, மக்களின் உயிரைக் கையில் பிடித்துக்கொள்ளும் அளவுக்கு தனி மனித பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள திமுக அரசுக்கு கடும் கண்டனம்.

சா்வாதிகாரி என்று தன்னைத்தானே சொல்லி கொண்டால் மட்டுமே சட்டம் ஒழுங்கை சீா் செய்துவிட முடியாது. தனி மனித பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். மீதமிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது, மக்கள் மீது உண்மையான அக்கறையுடன் ஆட்சி செய்து, சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments