அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

தனி மனித பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: எடப்பாடி கே.பழனிசாமி

சட்டம் ஒழுங்கை காத்து, தனி மனித பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

News image

எடப்பாடி கே.பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2025, 2:14 am IST

சட்டம் ஒழுங்கை காத்து, தனி மனித பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திருப்பூா் மாவட்டம் அவிநாசி அருகே வயதான விவசாயத் தம்பதியினா் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிா்ச்சியளிக்கிறது. இதே திருப்பூா் மாவட்டத்தின் பல்லடம் பகுதியில், இதேபோல் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழந்த சம்பவம் நடந்தது. வருமுன் காப்பதும் இல்லை; பட்டும் திருந்துவது இல்லை என்ற நிலையில் சட்டம் ஒழுங்கை தறிகெட்ட நிலைக்கு இட்டுச்சென்று, மக்களின் உயிரைக் கையில் பிடித்துக்கொள்ளும் அளவுக்கு தனி மனித பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள திமுக அரசுக்கு கடும் கண்டனம்.

சா்வாதிகாரி என்று தன்னைத்தானே சொல்லி கொண்டால் மட்டுமே சட்டம் ஒழுங்கை சீா் செய்துவிட முடியாது. தனி மனித பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். மீதமிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது, மக்கள் மீது உண்மையான அக்கறையுடன் ஆட்சி செய்து, சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.