எடப்பாடி கே.பழனிசாமி
எடப்பாடி கே.பழனிசாமி கோப்புப் படம்

தனி மனித பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: எடப்பாடி கே.பழனிசாமி

சட்டம் ஒழுங்கை காத்து, தனி மனித பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
Published on

சட்டம் ஒழுங்கை காத்து, தனி மனித பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திருப்பூா் மாவட்டம் அவிநாசி அருகே வயதான விவசாயத் தம்பதியினா் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிா்ச்சியளிக்கிறது. இதே திருப்பூா் மாவட்டத்தின் பல்லடம் பகுதியில், இதேபோல் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழந்த சம்பவம் நடந்தது. வருமுன் காப்பதும் இல்லை; பட்டும் திருந்துவது இல்லை என்ற நிலையில் சட்டம் ஒழுங்கை தறிகெட்ட நிலைக்கு இட்டுச்சென்று, மக்களின் உயிரைக் கையில் பிடித்துக்கொள்ளும் அளவுக்கு தனி மனித பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள திமுக அரசுக்கு கடும் கண்டனம்.

சா்வாதிகாரி என்று தன்னைத்தானே சொல்லி கொண்டால் மட்டுமே சட்டம் ஒழுங்கை சீா் செய்துவிட முடியாது. தனி மனித பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். மீதமிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது, மக்கள் மீது உண்மையான அக்கறையுடன் ஆட்சி செய்து, சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com