தமிழகத்தில் ரூ. 500 கோடிக்கு வருமான வரி மோசடி!
தமிழகத்தில் சுமார் 22,500 பேர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக வருமான வரித் துறை கூறியுள்ளது.
தமிழகத்தில் சுமார் 22,500 பேர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக வருமான வரித் துறை கூறியுள்ளது.
தமிழகத்தில் மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த 22,500 பேர்வரையில், வருமான வரிக் கணக்கில் மோசடி செய்துள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
போலியான ஐடி ரிட்டர்ன் தாக்கல் (ITR) மற்றும் போலியான ஆவணங்களையும் சமர்ப்பித்து, ரூ. 500 கோடிக்கு வருமான வரி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
Advertisement
Advertisement
இதனையடுத்து, பொதுத்துறை, தனியார் ஊழியர்களின் வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.