கோப்புப் படம் 
தமிழ்நாடு

பிறை தெரிந்தது! நாளை ரமலான் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு

பிறை தெரிந்ததால் தமிழ்நாடு முழுவதும் நாளை ரமலான் கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவிப்பு.

DIN

பிறை தெரிந்ததால் தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஹிஜ்ரி 1446 ரமலான் மாதம் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஆங்கில மாதம் மார்ச் 30 ஆம் தேதி அன்று மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் தென்பட்டது.

ஆகையால், திங்கள்கிழமை நாளை ( மார்ச் 31) ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் நாளை ரமலான் கொண்டாடப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில அரபு நாடுகளில், இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், நாடு முழுவதும் நாளை ரமலான் கொண்டாடப்படவுள்ளது.

இதையும் படிக்க | 1-5ஆம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்ஜெட் எதிரொலி: சென்செக்ஸ் 944 புள்ளிகளுடனும், நிஃப்டி 263 புள்ளிகளுடன் உயர்ந்து நிறைவு!

தேசிய பாதுகாப்பு குறித்து ராகுல் பேசும்போது சிரித்த காங்கிரஸ் எம்.பி.க்கள்!

அச்சுறுத்தும் பணிநீக்கம்! ஏஐ தொழில்நுட்பம் மட்டுமே காரணமா? பின்னணியில் என்ன நடக்கிறது?

திருப்பரங்குன்றம் வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்புக்கேட்ட மதுரை ஆட்சியர்!

குளிர்கால சருமப் பராமரிப்பு டிப்ஸ்!

SCROLL FOR NEXT