பிறை தெரிந்தது! நாளை முதல் ரமலான் நோன்பு!
தமிழகத்தில் இன்று (பிப். 18) மாலை பிறை தெரிந்ததால், நாளை முதல் (பிப். 19) ரமலான் நோன்பு தொடங்குகிறது.
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 8:07 PM
தமிழகத்தில் இன்று (பிப். 18) மாலை பிறை தெரிந்ததால், நாளை முதல் (பிப். 19) ரமலான் நோன்பு தொடங்குவதாக என தலைமை காஜி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை சவூதியில் ரமலான் பிறை தென்பட்டது. இதனைத் தொடர்ந்து செளதி அரேபியா, துபை உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் புனித ரமலான் மாதம் இன்று (பிப்.18) காலை முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.