அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!
அந்தமானில் தொடங்கியுள்ளது தென்மேற்குப் பருவமழை..
அந்தமானில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை வெய்யில் மண்டையைப் பிளந்து வருகிறது. அவ்வப்போது இரவில் மிதமான மழை தலைகாட்டி வந்தாலும், பல பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. குறிப்பாக வேலூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே இந்தாண்டு தொடங்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில், தெற்கு அந்தமான், நிக்கோபார் தீவு, தென்கிழக்கு வங்கக் கடலில் தென்மேற்குப் பருவமழை இன்று தொடங்கியுள்ளது.
Advertisement
Advertisement
அதேபோன்று கேரளத்தில் இந்தாண்டு முன்கூட்டியே வரும் 27-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்மை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.