ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!
திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன், தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன், தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் ஆலங்குளம் எம்எல்ஏ-வுமான மனோஜ் பாண்டியன் திமுகவில் செவ்வாய்க்கிழமை காலை இணைந்தார்.
இந்த நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை சந்தித்து, தனது அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தையும் வழங்கினார்.
Advertisement
ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதால், அதிமுகவிலிருந்து மனோஜ் பாண்டியன் நீக்கப்பட்ட நிலையில், பாஜகவின் கிளை அலுவலகமாக அதிமுக செயல்படுவதால், திமுகவில் இணைவதாகக் கூறினார்.
இதையும் படிக்க: ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்
summary