தமிழ்நாடு

அடுத்த 2 நாள்களுக்கு சென்னை, புறநகரில் பலத்த மழை!

அடுத்த 2 நாள்களுக்கு சென்னை, புறநகரில் பலத்த மழைக்கு வாய்ப்பு தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

அடுத்த 2 நாள்களுக்கு சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வானிலை தொடர்பான விவரங்களைக் கணித்து சமூக வலைதளங்களில் பதிவிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீன் ஜான், மழை நிலவரம் தொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று(நவ. 9) பெய்த மழைக்குப் பிறகு, இன்றும்(நவ. 10) தென் மாவட்டங்களில் மழை தொடரும்.

கிழக்கு காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வடதமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

டெல்டா மாவட்டங்கள் முதல் புதுவை கடற்கரை வரை நாளை முதல் மழை பெய்யும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நவ. 11, 12 ஆம் தேதிக்குப் பிறகு மழை படிப்படியாகக் குறைந்து, நவ. 18, 19 தேதிகளில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடையும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Heavy rain likely in Chennai and its suburbs for the next 2 days

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாதுகாப்பு, திறன் மேம்பாடு, செய்யறிவு.. இந்தியா - பிரான்ஸ் இடையே 20 ஒப்பந்தங்கள் கையொப்பம்!

மும்பை நகரத்தை விரும்பிய பிரான்ஸ் அதிபர் : பிரதமர் மோடி

திறமையும் நேர்மையும்... சிவகார்த்திகேயனை வாழ்த்திய கமல் ஹாசன்!

ஆஸ்திரேலியாவை வெளியேற்றிய மழை! சூப்பர் 8 சுற்றுக்கு ஜிம்பாப்வே அணி தகுதி!!

பாகிஸ்தானின் சூப்பர் 8 சுற்று கனவைக் கலைக்க காத்திருக்கிறதா நமீபியா?

SCROLL FOR NEXT