செயல்படாத பழைய வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை எடுக்க வேண்டுமா?
வங்கிக்கணக்குகளில் உள்ள உரிமை கோரப்படாத பணத்தைப் பெற ஆர்பிஐ சிறப்பு முகாம் பற்றி...
செயல்படாத பழைய வங்கிக்கணக்குகளில் உள்ள பணத்தைக் கண்டறியவும் அவற்றைப் பெறவும் இந்திய ரிசர்வ் வங்கி புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி நீங்கள் மறந்துவிட்ட அல்லது உரிமை கோரப்படாத நிலையில் உள்ள வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை நீங்கள் பெற முடியும்.
உங்களுடைய அல்லது உங்கள் குடும்பத்தினரின் வங்கிக்கணக்கு 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை அல்லது அதற்கு மேலும் செயல்படாமல் இருந்து அவற்றில் தொகை இருந்தால் அதனைக் கண்டறிந்து பெற முடியும்.
Advertisement
Advertisement
வங்கியில் செயல்படாத கணக்குகளில் (2 ஆண்டுகளுக்கும் மேலாக, 10 ஆண்டுகள் வரை) மற்றும் பணம் கோரப்படாத டெபாசிட்கள் (10 ஆண்டுகளுக்கு மேல்) உள்ள தொகை ஆர்பிஐ-யின் டிஇஏ- நிதிக்கு மாற்றப்படும் நிலையில் அதனை நீங்களோ அல்லது உங்கள் சட்டப்பூர்வ வாரிசுகளோ எந்த நேரத்திலும் அதைக் கோரிப் பெறலாம்.
இந்நிலையில் உரிமை கோரப்படாத இந்த தொகையைப் பெற நீங்கள் https://udgam.rbi.org.in என்ற இணையதளத்திற்குச் சென்று வங்கிள் கணக்காளரின் பெயர் மட்டும் மொபைல் எண்ணை பதிவிட்டு தேடலாம். இதில் 30 வங்கிகள் உள்ளன.
அல்லாமல் நீங்கள் வங்கிக் கிளையையும் தொடர்புகொள்ளலாம்.
ஆன்லைனிலோ அல்லது நேரிலோ உங்களுடைய கேஒய்சி விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் (ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, அல்லது ஓட்டுநர் உரிமம்).
உங்களுடைய விவரங்கள் பொருந்தினால் அந்த பணத்தை நீங்கள் வட்டியுடன் பெறலாம். இது அனைத்து நேரங்களிலும் செயலில் உள்ள நிலையில் இந்த தொகையை மக்கள் எளிதாகப் பெற தற்போது வங்கிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
2025 அக்டோபர் முதல் டிசம்பர் வரை நாடெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மூலமாக உரிமை கோரப்படாத வங்கியில் உள்ள பணத்தை உரிய ஆவணங்களை வழங்கிப் பெறலாம் என்று ஆர்பிஐ கூறியுள்ளது.
இதையும் படிக்க | பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!
Forgot Money In Old Bank Accounts, RBI Launches Drive To Help Customers Reclaim Unclaimed Deposits
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.